Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3200
கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்

கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை

வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்

இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை

யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.