கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் கருதுகோற் றேன்நறுஞ் சுவையை அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை ஆவியை ஆவியுட் கலந்த பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் பேசுதற் கரும்பெரும் பேற்றை விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் விளக்கினைக் கண்டுகொண் டேனே