கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத் துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே