கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக் காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும் ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன் றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத் துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய் வித்தகநின் திருவருளை வியக்கமுடி யாதே