Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3797
கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர் 

கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர் 
உரைக்கண வாத உயர்வுடை யீர்என் 

உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர் 
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர் 

வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால் 
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.