கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும் நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே