கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே