கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே