Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3504
கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் 

கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே 

எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் 

மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ 

டடிக்கடி அறைந்தனன் ஆண்டே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.