கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக் கற்பங்கள் கணக்கில கடப்ப நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா நித்திய நிற்குண() நிறைவே அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும் அருட்பெருங் கடல்எனும் அரசே புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து பொதுநடம் புரிகின்ற பொருளே () நிர்க்குண - முதற்பதிப்பு பொ சு, பி இரா, ச மு க