கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம் கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும் நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண் நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி