Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5428
கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக் 

கடவுளே என்இரு கண்ணே 
நிலையனே ஞான நீதிமன் றிடத்தே 

நிருத்தஞ்செய் கருணைமா நிதியே 
புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி 

பொருந்திய புதுமைஎன் புகல்வேன் 
சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ 

திருவருட் பெருந்திறல் பெரிதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.