கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர் கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண் செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன் சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப் பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே