களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன் வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால் விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன்