Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5317
காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் 

கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் 
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் 

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் 
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் 

ஐயர் திருவடிக் கானந்த மாகப் 
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே   
 பாட்டும் திருத்தமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.