காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல் பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும் தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே