காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே