Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :471
காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் துஎரில் திகழ்மதியே
தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.