காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும் கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன் உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் துஎரில் திகழ்மதியே தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே