காயோ டுடனாய் கனல்கை ஏந்திக் காடே இடமாக் கணங்கொண்ட பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர் பித்தப் பெருமான் திருமகனார் தாயோ டுறழும் தணிகா சலனார் தகைசேர் மயிலார் தனிவேலார் வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என் வெள்வளை கொண்டார் வினவாமே