காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப் போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய் பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே