Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3688
காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே 

கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே 
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே 

சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே 
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே 

அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே 
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.