Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4662
காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த 

கற்பகத் தனிப்பெருந் தருவே 
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த 

சோதியே தூய்மைஇல் லவர்க்குச் 
சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான 

சித்தியே சுத்தசன் மார்க்க 
வாய்மையே என்றேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.