Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3695
காரணம் இதுபுரி காரியம் இதுமேல் 

காரண காரியக் கருவிது பலவாய் 
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே 

அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே 
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம் 

பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே 
தாரணி தனில்என்ற தயவுடை அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.