Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5726
காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ 

கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை 
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல் 

இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ 
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் 

பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப் 
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப் 

பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.