Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4223
காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது 

கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி 
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி 

கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே 
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார் 

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.