காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே