Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3423
காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் 

கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் 

வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத 

அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் 

பதைத்ததுன் உளம்அறி யாதோ   
  காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ சு பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.