கிளைக்குறும் பிணிக்கோர் உறையூளாம் மடவார் கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந் திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன் இணைஅடிக் காக்கும்நாள் உளதோ விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே மெய்அடி யவர்உள விருப்பே திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயூந் தணிகைத் தெய்வமே அருட்செழுந் தேனே