குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம் பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக் கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே