குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான் வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம் கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே