Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4729
குலத்திலே சமயக் குழியிலே நரகக் 

குழியிலே குமைந்துவீண் பொழுது 
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து 

நிற்கின்றார் நிற்கநான் உவந்து 
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் 

மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம் 
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.