Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1051
குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் 

கும்பியை ஓம்பினன் அல்லால் 
செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் 

செப்புதல் மறந்தனன் அதனால் 
விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே 

மென்கரும் பீன்றவெண் முத்தம் 
தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.