Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1043
கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு 

கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து 
மாறு மாயையால் மயங்கிய மனனே 

வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில் 
ஆறு மேவிய வேணிஎம் பெருமான் 

அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால் 
ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.