Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1019
கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே 

காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன் 
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன் 

செய்வ தென்னைநின் திருவருள் பெறவே 
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி 

ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே 
செய்த வத்திரு மடந்தையர் நடனம் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.