கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன் செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன் செய்வ தென்னைநின் திருவருள் பெறவே எய்த வத்திரு அருளெனக் கிரங்கி ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே செய்த வத்திரு மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே