Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5687
கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக் 

கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள் 
கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான் 

கடிமணம் புரிந்தனன் என்றாள் 
ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம் 

ஒளிஎனக் களித்தனன் என்றாள் 
இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள் 

என்தவத் தியன்றமெல் லியலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.