கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசை வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே