கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும் எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே