Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4091
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த 

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே 
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே 
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.