கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத் தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ