Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3457
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் 

சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் 

நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் 

பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் 

விளம்பலென் நீஅறிந் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.