Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3108
சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே

தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்

பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே

பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த

உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.