சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரணைச் சராசர சடத்துள் உடையனை ஒற்றி ஊரனை முவர் உச்சனை உள்கிநின் றேத்தாக் கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே