Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5590
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் 

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் 
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் 

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை 
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் 

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் 
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் 

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.