Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3043
சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு

தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்

கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே

மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்

பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.