சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர் தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர் மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே