Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :217
சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே
பாடல் எண் :1011
சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா 

தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள் 
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் 

இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய் 
சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய் 

சுகமி லாதநீ தூரநில் இன்றேல் 
ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.