சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் சிதம்பர நடம்புரி சிவத்தைப் பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் பதிசிவ பதத்தைத்தற் பதத்தை இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளைச் சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச் சாமியைக் கண்டுகொண் டேனே