சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே