சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம் மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும் இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய் அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே