Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3010
சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்

தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே

பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்

எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே

கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.